அரசு அலுவலர்களுக்கு ஜன.22ல் தேசிய கூடைப்பந்து தேர்வு சென்னையில் நடக்கிறது

திண்டுக்கல், ஜன. 19: அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தேர்வு சென்னையில் ஜன.22ம் தேதி நடக்கிறது.2019-20ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஆண்களுக்கு ஜன. 28ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை பஞ்சாபில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான தேர்வு வருகிற ஜன. 22ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழக அணிக்காக தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். விருப்பமுள்ளவர்கள் ஜன.22 அன்று தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம்.

பயணப்படி மற்றும் தினப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வழங்கப்படமாட்டாது. அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெறலாம். (ஜிபிஎப் அல்லது ஜிபிஎஸ் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.) சீருடை பணியாளர்கள் பங்கேற்க இயலாது. இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. கலந்து கொள்பவர்கள் அலுவலக அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியிலோ அல்லது 0451-2461162 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: