ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

ஒட்டன்சத்திரம், ஜன. 19: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை பாறைபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (80). இவர் கடந்த ஜன.13ம் தேதி மார்க்கம்பட்டி பஸ்நிலையம் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குப்புச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: