×

சாலை ஆய்வாளர் சங்கத்தில் கொள்ளை முயற்சி திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல்லில் சாலை ஆய்வாளர்கள் சங்க அலுவலக கட்டிடத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே யூனியன் அலுவலக வளாகத்தில் சாலை ஆய்வாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சங்க அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.

 இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சங்க அலுவலகத்திற்கு வந்த நிர்வாகிகள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்