பணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடல பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை

ஒட்டன்சத்திரம், ஜன. 19: ஒட்டன்சத்திரம் அருகே தேர்தலில் பணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடவில்லை என கூறி பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பு திப்பம்பட்டியை சேர்ந்தவர் பாலுதாய் (52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேதையுறும்பு குருசாமி கோயில் அருகே நடந்து சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவர் பணம் வாங்கி கொண்டு ஏன் தேர்தலில் ஓட்டு போடவில்லை என தகராறு செய்து பாலுதாயை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பாலுதாய் அளித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: