மேலூர், ஜன. 19: மேலூர் அருகே தும்பைப்பட்டி ஊராட்சியில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினத்தை முன்னிட்டு நேற்று சைக்கிள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.தும்பைப்பட்டி ஊராட்சி தலைவர் அயூப்கான் மற்றும் ஊராட்சி செயலர் பிரபு தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் ஊராட்சியின் முக்கிய தெருக்கள் வழியாக நடைபெற்றது.