மெக்கானிக் தற்கொலை

சோழவந்தான், ஜன.19: சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி  (30). மெக்கானிக்கான இவர் இதே ஊரில் டூவீலர்கள் பழுது பார்க்கும் கடை  வைத்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஆனந்தி என்பவரை திருமணம் செய்த  இவர் மனைவியை பொங்கல் பண்டிகைக்காக மாமனார் வீட்டில் விட்டு  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்மின்  விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் தூக்கிடுவதற்கு  முன் விஷ மருந்தையும் குடித்துள்ளார். நேற்று காலை அருகில் உள்ளவர்கள்  பார்த்து காடுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ  இடத்திற்கு வந்த எஸ்.ஐ., ஜெகதீஸ்வரன், இறந்த சத்தியமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி சோழவந்தான் அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து  வருகிறார். திருமணமான ஆறு மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட  இச்சம்பவத்தால் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Related Stories: