மதுரை, ஜன. 19: மதுரையில் போலீசை தாக்கிய 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர் கடந்த 17ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு சீருடையுடன் தனது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து, சம்மட்டிபுரம் புறக்காவல்நிலைத்திற்கு சென்றார். சம்மட்டிபுரம் மெயின் ரோடு பாரதியார் நகர் பகுதியில் 4 பேர் கும்பல் நடுரோட்டில் நின்று கொண்டு அசிங்கமாக பேசி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக தெரிகிறது. இவர்களை கலைந்து செல்லுமாறு சிவக்குமார் கூறியுள்ளார்.