சென்னை: கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து பெட்ரோல் திருடுவதாக அசோக்நகர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அசோக்நகர் போலீசார், மேற்கண்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் பெட்ரோலை திருடிக் கொண்டிருந்தனர்.