குண்டர் சட்டத்தில் 12 பேர் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பள்ளிக்கரணை ஏரிக்கரை பவானியம்மன் கோயில் தெருவை சேர்ந்த யுவராஜ் (எ) அனிருத் (27) மற்றும் அரிபிரசாத் (எ) அரி (26), பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்த கலையரசன் (24), பள்ளிக்கரணை பாரதியார் தெருவை சேர்ந்த தனசேகர் (24).  ஏழுகிணறு பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் குர்ஜார் பகுதியை சேர்ந்த ஷியாம் குர்ஜார் (23), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த மகேஷ் சவுத்ரி (24).கஞ்சா மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகர் சுப்ரமணி தெருவை சேர்ந்த லியோ ரீகன் (26), ஓட்டேரி மேட்டுப்பாளையம் கர்நாடிக் மில் லேன் பகுதியை சேர்ந்த மதன்குமார் (29). வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நெற்குன்றம் சிடிஎன் நகர் 8வது தெருவை சேர்ந்த தனஞ்செழியன் (36), மதுரவாயல், கந்தசாமிநகர் 3வது தெருவை சேர்ந்த சதீஷ் (28). கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை ஜெ.ஜ.நகர் 2வது தெருவை சேர்ந்த ராபர்ட் (25), வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பம்மல் குழந்தைகள் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகிய 12 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: