துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் கவுதம் (18). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர்கள் 9 பேருடன் கவுதம் கிழக்கு கடற்கரை சாலை அக்கரைக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் கடலில் ஜாலியாக குளித்தபோது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய கவுதம் உயிருக்கு போராடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.