தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 40வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயை மெட்ரோ ரயில் பணி காரணமாக ஊழியர்கள் தற்காலிகமாக அடைத்து வைத்து உள்ளனர். இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு வளாகம் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கிறது.