சென்னை: சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து வருபவர்கள் சண்முகம், பாண்டி, ராஜேஷ், ஸ்ரீ. இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் உள்ள உணவகம் வெளியே சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது, மது போதையில் அவ்வழியே வந்த ஒருவர், போலீசார் மீது இடித்து விட்டு சென்றுள்ளார். இதுபற்றி போலீசார் கேட்டபோது, அந்த ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.