×

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இளைஞர், மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜன.14: வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இளைஞர், மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் லோகேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினர். உறுப்பினர்கள் சதீஷ், விஜயகுமார், ஜனத்குமார், சாய்குமார் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரோஜா, சிபிஐ அரியூர் செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டு கண்டன உரையாற்றினர்.

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : student organizations ,Vellore Anna Gallery ,
× RELATED சென்னை ராயபுரத்தில் இந்தியா கூட்டணி...