×

சாலையில் வாகன ஒட்டிகளை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.14:  ஆனந்தூர், பரமக்குடி சாலையின் இருபுறமும் கருவேல முட்களால் வாகன ஓட்டிகள் உள்ளதால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அவற்றை அப்புறப்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் இருந்து பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையின் இருபக்கமும் கருவேல மரங்கள் ரோட்டில் படர்ந்து உள்ளது. இதனால் ஒரு வாகனம் வந்தால் மற்றொரு வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளும், டூவீலர்களில் செல்லும் வாகன ஒட்டிகளையும் கருவேல மரத்தின் முட்கள் குத்தி பொதுமக்களை பதம் பார்த்து விடுகிறது.

இந்த நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆனந்தூரில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் மட்டுமே நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவேல மரங்களை அகற்றினர். மீதி தூரத்தை அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பொதுமக்கள் சார்பாக சாலையின் இருபுறம் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...