×

பொங்கலுக்கு தாய் வீடு வந்த இளம்பெண் தற்கொலை

விருதுநகர், ஜன. 14: பொங்கல் பண்டிகைக்கு தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் பாப்பா. இவரது 2வது மகள் கோகிலா (23). இவருக்கும், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த அஜித்குமாருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்நிலையில், தைப்பொங்கலுக்கு தாய் வீட்டிற்கு வந்த கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து,திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.

Tags : Pongal ,suicide ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா