×

யூனியன் அலுவலகங்கள் சூறையை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன. 14: ஒன்றிய தலைவர் தேர்தலின்போது, யூனியன் அலுவலகங்கள் சூறையாடப்பட்டதை கண்டித்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘மாவட்டத்தில் ஜன.11ல் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில்,  அரசியல் கட்சியினர் ஒன்றிய அலுவலகங்களில் நடத்திய வன்முறையை கண்டிக்கிறோம். வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும். ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தலை வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறையை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், ஊரக வளர்ச்சித்துறை மாநில செயலாளர் புகழேந்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் அய்யம்மாள் சிறப்புரையாற்றினர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...