×

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பொங்கல் விழா

திருச்சுழி, ஜன.14: திருச்சுழி அருகே, ம.ரெட்டியபட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில், திமுக ஒன்றிய தலைவர் பொன்னுதம்பி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசி, சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை ஒன்றியத்தலைவர் மூக்கையன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், காமிலா பர்வின் ரியாஷ், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தொல்காப்பியம், ஊராட்சி மன்றத் தலைவர் உடையனாம்பட்டி முருகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விஏஓ அலுவலகத்தில்
சமத்துவ பொங்கல் சிவகாசி: நாடெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. சிவகாசி அருகே ஆணையூர் விஏஓ அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெண் விஏஓக்கள் பொங்கல் வைத்தனர். பின் இயற்கையை வழிபட்டனர். பொதுமக்கள் முன்னிலையில் கரும்புடன் பொங்கல் விழா களைகட்டியது. கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜூக்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தமிழர் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்திருந்த மாணவிகள், கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags : ceremony ,government offices ,schools ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா