×

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

தேவதானப்பட்டி, ஜன.14: தேவதானப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார். தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசமர தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி(52). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்வதற்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணறு அருகே வேலை செய்து கொண்டிருந்த அவர், திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தோட்ட உரிமையாளர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த பால்பாண்டியின் உடலை மீட்டனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா