×

திருப்போரூர் பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்த 3 பேர் கைது

திருப்போரூர், ஜன. 14: திருப்போரூர் பெட்ரோல் பங்க்கில், கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் 3 பெண் ஊழியர்கள், 2 ஆண் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேர், பெண் ஊழியரிடம் பெட்ரோல் போட்டு, விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். இதனை தடுக்க வந்த ஆண் ஊழியரையும் தாக்கினர். பின்னர் அவர்கள், திடீரென பெண் ஊழியர் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினர்.
புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பணம் பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது.

இதையடுத்து போலீசார், சிறுதாவூரை சேர்ந்த மணிகண்டன் (23), ஆமூர் கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (22), ஜஸ்டின் பிரபாகரன் (24) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : burglary ,Tiruppore ,
× RELATED ரூ.2000 திருடியதாக சந்தேகம்; சிறுவர்களை...