×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

பள்ளிப்பட்டு, ஜன. 14: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி மற்றும் சமத்துவ பொங்கல் விழா நேற்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்ற புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தொடங்கிவைத்தார்.

மாணவியர், ஆசிரியர்கள், பேரூராட்சி பணியாளர்கள்   முக்கிய பகுதிகளில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிளாஸ்டிக், டயர்கள் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மாணவியருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு  மாணவியர் ஆசியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசிகுமார்,  பேரூராட்சி  பணியாளர்கள் குப்பன், ஜெயசங்கர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

Tags : bogey rally ,
× RELATED அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி