×

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் சேதம்

திருவள்ளூர், ஜன. 14:  சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் இருபுறமும் கரைகளின் மீது பொருத்தப்பட்ட சிமென்ட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளதால், அதில் மரங்கள் வளர்ந்து முட்புதராக காட்சியளிப்பதோடு, மழைக்காலங்களில் கரைகள் சரிந்து வருகிறது.

இக்கால்வாய் கரைகளை பராமரிக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைத்து பலப்படுத்த, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : department ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...