புதுச்சேரி, ஜன. 14: புதுவையில் உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை கேட்டு பாண்லே பால் விற்பனை முகவர்கள் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர். புதுவையில் பால் விற்கும் முகவர்களுக்கு உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை வழங்க வேண்டும். அதன் நிலுவை தொகையையும் பொங்கலுக்கு முன்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிஷன் வீதியில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை பாண்லே பால் விற்பனை (ஏஐடியுசி) முகவர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர்.