திருக்கோவிலூர், ஜன. 14: திருக்கோவிலூர் அடுத்த ஆவியூர் பகுதியில் நேற்று திருக்கோவிலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் குணபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை பிடித்து விசாரித்ததில் வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்த பிச்சைகாரன் மகன் துளசிராமன் (31), மொட்டையன் மகன் பஞ்சாட்சரம் (37), ஏழுமலை மகன் வாசுதேவன் (33) ஆகிய 3 பேரும் எவ்வித அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.