நெய்வேலி, ஜன. 14: நெய்வேலி அடுத்த ஆயிப்பேட்டை சாலையில் கீழூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.கே. இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் விஷன் நீட் ஐஐடி அகடமி இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுபைதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விஷன் அகடமி இயக்குனர் பிரசிதா மற்றும் மேனேஜிங் டைரக்டர் வெங்கடேசன், பள்ளி சேர்மன் சுந்தரவடிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பான முறையில் கொண்டாடினர். இறுதியில் மாணவர்களுக்கு பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.