×

பெரியநெற்குணம் கிராமத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேத்தியாத்தோப்பு, ஜன. 14:  சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது பெரியநெற்குணம் கிராமம். இக்கிராமத்தில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் சார்பில் கிராமபெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி, மாணவிகள் உள்ளிட்ட பலருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல்தொல்லைகளில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, அவற்றிற்கான காவல்துறை உதவியை பெறுவது, பெண்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல், தேவையற்ற விஷயங்களை யாரிடமும் பகிராதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் நலன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெரியநெற்குணம் கிராமமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

Tags : Awareness Program for Women in Periyakernum Village ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது