வத்தலக்குண்டு, ஜன. 14: வத்தலக்குண்டு அருகே டூவீலர் மீது வேன் மோதியதில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். தூத்துக்குடியை சேர்ந்தவர் சபீக் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் டூவீலரில் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வத்தலக்குண்டு- நிலக்கோட்டை சாலையில் நூத்தலாபுரம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சபீக் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.