உடன்குடி பகுதியில் ஜன.21ல் மின்தடை

உடன்குடி,ஜன.14: உடன்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 21ம்தேதி மின்தடை ஏற்படுமென திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் பொன்கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:உடன்குடி துணை மின்நிலையத்தில் வருகிற 21ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் 21ம் தேதி பிற்பகல் 1மணி முதல் மாலை 5வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: