பைக் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி

ஆறுமுகநேரி, ஜன.14: காயல்பட்டினம் அருகே ஆட்டோ மோதிய விபத்தில்  வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.  திருச்செந்தூர் வடக்கு நாடார் தெருவை சேர்ந்தவர் தனராஜ்(46). இவரது மகன் சதீஸ்(18). இவர் திருச்செந்தூர் கடற்கரையில் சுண்டல் விற்கும் தொழில் செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து பைக்கில் காயல்பட்டினம் வரும்போது ஓடக்கரை அருகில் எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் முகம் மற்றும் தாடையில் பலத்த காயமடைந்தார்.  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சதீஸ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோவை ஓட்டிவந்த வீரபாண்டியன்பட்டனத்தை சேர்ந்த கென்னடி என்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: