திருச்சி மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்

துறையூர், ஜன.14: திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு தேர்தலில் 3வது வார்டில் போட்டியிட்டு தர்மன்ராஜேந்திரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருச்சி மாவட்ட அளவில் மொத்த கவுன்சிலர்கள் 24 பேரில் 18 பேர் திமுக சார்பில் வெற்றி பெற்றனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக துறையூர் வீரமச்சான்பட்டியை சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் முரளி, ஒன்றியகுழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துணை தலைவர் புவனேஸ்வரி, ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், திமுக ஒன்றிய பொருளாளர் காளிப்பட்டி சுப்பிரமணி, வழக்கறிஞர்கள் ஜெயராஜ், தென்னரசு, விஜய்தர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: