×

அரவக்குறிச்சி அருகே கார் மோதி கொத்தனார் பரிதாப பலி

அரவக்குறிச்சி, ஜன. 14: அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டகை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே கொத்தனார் பலியானார். கரூர் புலியூர் காளியப்பனூரைச் சேர்ந்த நடேசன் ( 60) கொத்தனார்.அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டகை என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தகரக் கொட்டகையில் நேற்றிரவு கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்கும் போது அரவக்குறிச்சியிலிருந்து கரூருக்கு வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே நடேசன் பலியானார். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...