×

எஸ்டிபிஐ கட்சி சார்பில் 3 ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக அஜ்மல் செரீப், திருப்புல்லானி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பைரோஸ் கான், ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக முஜிபுல்லாஹ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இனாம் ஊராட்சிமன்ற தலைவராக முகமது ஜியாவுதீன், ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சிமன்ற தலைவராக அக்பர்ஜான் பீவி, கடலூர் மாவட்டம் பழையபட்டிணம் ஊராட்சிமன்ற தலைவராக ஆகியோர் வெற்றி பெற்றனர். அதே போல் ஊராட்சி மன்ற வார்டுகளில் 103 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மறைமுக தேர்தலில், ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றிய துணை சேர்மனாக பாபு (எ) முஜிபுல்லா வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணாங்குண்டு ஊராட்சிமன்ற துணைத் தலைவராக நபிசா, எக்ககுடி ஊராட்சிமன்ற துணை தலைவராக ராஜா சாகுல் ஹமீது, பெரியப்பட்டினம் ஊராட்சிமன்ற துணைத் தலைவராக புரோஸ் கான் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சிமன்ற துணை தலைவராக பீர் முஹம்மது, மேலூர் ஒன்றியம் கீழவளவு ஊராட்சி மன்ற துணை தலைவராக மெஹர் தாஜ்,  மதுரை  பனைக்குளம் ஊராட்சிமன்ற துணை தலைவராக இப்ராஹிம் ஷா ஆகியோர் வெற்றிபெற்றனர்.

Tags : panchayat leader ,party ,SDBI ,
× RELATED கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி...