×

விவசாயிகள் பயன்பெற அதிகாரி அழைப்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜன.14: திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ள தனித் தேர்வர்கள் வரும் 20 மற்றும் 21 தேதிகளில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு கடந்த 6ம் தேதி முதல் 13ம் ேததி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசமானது வரும் 20 மற்றும் 21 தேதிகளில் 2 நாட்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேதிகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers Use Officers ,Class General Elections Specialists ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...