×

அருள்தந்தை டேவிட் மைக்கேலின் குருத்துவ வெள்ளி விழா 16-ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், ஜன.14: குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை டேவிட் மைக்கேல் அருள்தந்தையாக அருள்பொழிவு பெற்றதன் 25-ம் ஆண்டு நிறைவு விழா அழகிய மண்டபம் அருகிலுள்ள பிலாங்காலை சூசையப்பர் முதியோர் இல்லத்தில் வருகிற ஜனவரி 16-ம் ேததி காலை 10.30 மணி க்கு நன்றி திருப்பலியோடு நடைபெறுகிறது.விழாவில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஈடுபாட்டாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். அருள்தந்தை டேவிட் மைக்கேல் கோட்டாறு மறைமாவட்டத்திற்காக 1995-ம் ஆண்டு அப்போதைய ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

ேகாட்டாறு சவேரியார் பேராலயத்தில் உதவிப் பங்குப் பணியாளராக பணியைத் தொடங்கி பல்வேறு பங்குகளில் பணியாற்றியுள்ளனர். கோட்டாறு மறைமாவட்ட ஊடகத் தொடர்பாளர் உள்ளிட்ட பணிகளில் பொறுப்பேற்றதோடு குழித்துறை மறைமாவட்ட சமூகத் தொடர்பு இயக்குனராகவும் பணி செய்துள்ளார். ஊடகத் துறையில் சிறப்புக் கல்வியை அமெரிக்காவில் பயின்ற இவர் மறைமாவட்ட பத்திரிக்கைகளில் பொறுப்பேற்று பணி செய்துள்ளனர். குருத்துவ பணியுடன் இலக்கிய அரசியல் துறைகளிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வுக்காக பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருகிறார். ஆதரவற்ற முதியோர்களுடன் தனது குருத்துவ வெள்ளிவிழாவை கொண்டாட முடிவு செய்து பிலங்காலை சூசையப்பர் முதியோர் இல்லத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Holy Father ,David Michael ,
× RELATED பிலாங்காலையில் டேவிட் மைக்கேல்...