×

சையது அலி குறித்து திடுக்கிடும் தகவல் அம்பலம்

திருவனந்தபுரம்: தவுபீக் மற்றும் அப்துல் சமீமிற்கு நெய்யாற்றின்கரையில் வாடகை வீடு எடுத்து ெகாடுத்த சையது அலி  விதுராவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் கம்ப்யூட்டர் நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். பெயருக்கு தான்  அந்த நிறுவனத்தை அவர் நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு அதே  வணிக வளாத்தை சேர்ந்த ஒரு வியாபாரி தான் கடை எடுத்து கொடுத்துள்ளார். மனைவி வீடு  அருகில் தான் உள்ளது. இருப்பினும் இவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து  வந்துள்ளார். செல்போன் இருந்தாலும் அதை வெளியே கொண்டு செல்வதில்லை. இரவு வீடு திரும்பிய பின்னர் மட்டும் செல்போனை பயன்படுத்தியுள்ளார்.  அடிக்கடி களியக்காவிளை சென்று வந்துள்ளார். தான் செல்லும் இடம் குறித்து  மனைவியிடம் கூட கூறமாட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான்  1000 மாத  வாடகைக்கு இவர் விதுராவில் வீடு எடுத்தார். டெப்பாசிட்டாக 5 ஆயிரம்  கொடுத்துள்ளார். அருகே வசிப்பவர்களிடம் எந்த தொடர்பும் வைப்பதில்லை.  இவரது வாடகை வீட்டை ஒட்டி தான் வீட்டு உரிமையாளரும் வசித்து வந்துள்ளார். அவரிடமும் இவர் அதிகமாக பேசுவது கிடையாது. எஸ்ஐ கொல்லப்பட்ட அன்று இரவு  இவர் வீட்டில் இருந்துள்ளார். அன்று அதிகாலை 2 மணிவரை இவர் லேப்டாப்  பயன்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் இவர் தலைமறைவாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை சோதனையிட்ட தமிழக கியூ பிரிவு போலீசார் லோப்டாப்பை கைப்பற்றி  பரிசோதித்து வருகின்றனர். கொலைக்கு இவர்தான் மூளையாக இருந்திருக்கலாம் என்று  ேபாலீசார் கருதுகின்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கேரள போலீசார் பிடித்து விசரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு புதிய வீடியோ சிக்கியது சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன் கொலையாளிகள் நடந்து செல்லும் கேமரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடி அருகே முகத்தை மறைக்காமல் இவர்கள் சாதாரணமாக நடந்து செல்கின்றனர். செக்போஸ்ட் அருகில் உள்ள ஒரு சந்துக்குள் சென்று முகத்தை மறைத்துவிட்டு வெளியே வந்து சோதனைசாவடி நோக்கி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இது போலீசாருக்கு முக்கிய தடயமாக கருதப்படுகிறது.

Tags : Syed Ali ,
× RELATED புது வீட்டில் பால் காய்ச்சியபோது...