கிரசண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கடையநல்லூர், ஜன.13:    கடையநல்லூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி முதல்வர் வேலம்மாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சாலமோன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் ஆண்டனி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கனடா நாட்டை சேர்ந்தவர்களும் மற்றும் பானுமதி, நவ்ரோஸ் ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் பொங்கலிட்டு  கொண்டாடினர். தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனைத்து ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். விழாவினை உடற்கல்வி ஆசிரியர் காசிபாண்டியன், அப்துல்காதர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பள்ளி முதல்வர் ஆண்டனி நன்றி கூறினார்.

Related Stories: