மணல் கடத்திய தந்தை மகன் உள்பட 3 பேர் கைது

களக்காடு, ஜன 13: களக்காடு ஏட்டு செல்வன் மற்றும் போலீசார் களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சத்திரங்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஓடை அருகே சென்ற போது பைக் மற்றும் சைக்கிளில் பிளாஸ்டிக் சாக்குகளுடன் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் சாக்குகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜிடம் ஒப்படைத்தனர். அவர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் களக்காடு நகரத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் இசக்கிமணி என்ற மைக்கேல்(22), சமுத்திரலிங்கம் மகன் கணேசமூர்த்தி(44). அவரது மகன் சதீஸ்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மணல் கடத்துதலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின் 3 பேரையும் போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: