×

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

சேலம், ஜன.13:சேலம் அருகே ரயில் அடிப்பட்டு உயிரிழந்த பெண் குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் கோட்டத்திற்குட்பட்ட புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்திற்கும், மொரப்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே, கடந்த 10ம் தேதி இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ரயிvல் அடிப்பட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஈச்சம்பாடியிலிருந்து மொரப்பூர் வரை  செல்வதற்கான பஸ் டிக்கெட் மட்டுமே அவரிடம் இருந்தது.
தகவலறிந்து சென்ற சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், சேலம் ஜங்சன் ரயில் நிலைய போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது