×

பணி முடித்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு திடீர் சாவு

மேச்சேரி, ஜன.13: சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம்(38). இவர், கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், சஞ்சீவி(7), நித்தின்(5) என்ற மகன்களும் உள்ளனர். சேலம் விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த சதாசிவம், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். நேற்று காலை பணி முடிந்ததும், வீட்டிற்கு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கைகாட்டி வெள்ளாறு பகுதியில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெளியே வந்த அவர், சிறிது தூரம் சென்றதும் டூவீலரில் இருந்து சரிந்து விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் மற்றும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு, மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஏற்கனவே சதாசிவம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மேச்சேரி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், மாரடைப்பு ஏற்பட்டதில் சதாசிவம் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags : death ,policeman ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...