ஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவருக்கு வாழ்த்து

இளம்பிள்ளை, ஜன.13: சேலம் ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக, தமிழரசி வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்ட தமிழரசிக்கு, ஆண்டிப்பட்டி முன்னாள் தலைவர் பழனியப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இவர் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை பதவி வகித்தவர். தற்போது இவரது மருமகள் தமிழரசி வெங்கடேசன் 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

Related Stories: