மேச்சேரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

மேட்டூர், ஜன.13: மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேச்சேரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம், நேற்று ஒன்றியத்தலைவர் மாது தலைமையில் மேச்சேரியில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு, ஒன்றிய செயலாளர் மணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நடைபெறும் முறைகேட்டை கண்டித்து போராடியவர்களை பழிவாங்கும் நோக்கில், மேச்சேரி ஒன்றியம், மல்லியகுந்தம் ஊராட்சி தாவானூர், கூத்தனூர், வடக்கத்தியானூர், பாட்டன்தெரு பகுதி சிறு, குறு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குவதில்லை. ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் இந்தப் போக்கை கண்டித்து, ஜனவரி 31ம் தேதி மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: