×

மல்யுத்த போட்டியில் நாமக்கல் வீரர் தங்கம் வென்று சாதனை

குமாரபாளையம், ஜன.13: தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் நடத்திய மாநில அளவிலான போட்டியில், நாமக்கல் வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  குமாரபாளையத்தில், தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் நடத்திய 5வது மாநில மல்யுத்த போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. 22 மாவட்டங்களை சேர்ந்த 538 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். குமாரபாளையம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி போட்டியினை துவக்கி வைத்தார். சங்கத்தின் பொது செலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். சப்சீனியர் பிரீஸ்டைல் 45 கிலோ பிரிவில் நாமக்கல் வீரர் சௌரப் தங்கப்பதக்கம் வென்றார். 48 கிலோ பிரிவில் ஈரோடு லோகேஸ்வரன் தங்க பதக்கத்தையும், பாலவிஷால் வெள்ளி பதக்கமும் வென்றனர்.கிரிகோரோமன் 45 கிலோ பிரிவில் ஈரோடு கோகுல் தங்கம் வென்றார். 40 கிலோ மகளிர் பிரிவில் லோகோஸ்வரி, 49 கிலோ பிரிவில் சாய்மதி ஆகியோர் தங்கம் வென்றனர். சீனியர் பிரிஸ்டைல் 65 கிலோ பிரிவில் ஈரோடு அழகுராம், 55 கிலோ கிரிக்கோரோமன் பிரிவில் ஈரோடு ரஞ்சித்குமார், மகளிர் பிரிஸ்டைல் பிரிவில் திருச்சி நவீனாவும் தங்கம் வென்றனர்.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை