×

பாவை மருந்தாக்கியல் கல்லூரி

சார்பில் விழிப்புணர்வு பேரணிராசிபுரம், ஜன.13: பாவை மருந்தாக்கியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் தேசிய மருந்தாக்கியல் வார விழாவை முன்னிட்டு ‘மருந்தாளுநர்கள் உங்கள் மருந்து ஆலோசகர்கள்” என்ற தலைப்பில் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை தாங்கினார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். பேரணியை பாவை கல்வி நிறுவனங்களின் பொருளாளர் மருத்துவர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பாவை பார்மஸி கல்லூரி மாணவ, மாணவிகள் மருந்துகளை உபயோகப்படுத்தும் முறை பற்றியும், போதை பொருட்களின் விபரீதங்கள் பற்றியும், விழிப்புணர்வு பதாகைகளோடு முழக்கமிட்டு சென்றனர். மேலும் மருந்துகளை பற்றி விளக்கங்களை எடுத்துரைத்தனர். பேரணியில் பாவை காலேஜ் ஆப் பார்மஸி மற்றும் ரிசர்ச் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paavai College of Pharmacology ,
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்