×

போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்

நாமக்கல், ஜன.13: போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள். ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி, விபத்துகள் ஏற்படவும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதும் தாமதம் ஏற்படுகிறது.எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது