×

குமாரபாளையத்தில் போடப்பட்ட நாளிலேயே உடைந்த சிலாப் அகற்றம்

குமாரபாளையம், ஜன.13: குமாரபாளையம் நகராட்சி 20 மற்றும் 24வது வார்டுகளின் குடிநீர் சந்திப்பு குழாய்களுக்கான புதிய சிலாப் போடப்பட்டது. இந்த சிலாப் தரமானது இல்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் போட்டு விட்டு சென்ற சிலாப், அதே நாளில் வாகனத்தின் எடை தாங்காமல் உடைந்து விழுந்தது. இதையடுத்து அங்கு வந்த முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர், திமுக நிர்வாகிகள் தரமற்ற பணி குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இது போன்ற தரமற்ற பணியால், விபத்து அபாயம் உள்ளதாக கூறிய அவர்கள், பணியை தரமாக அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோமென எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட நகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவோடு இரவாக புதிய சிலாப்பை போட்டுச்சென்றனர்.

Tags : Chilaw ,Kumarapalayam ,
× RELATED வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு