×

உலக அமைதியை வலியுறுத்தி நடைபயணம்

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி குலோபல் பேமிலி அமைப்பு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதியை வலியுறுத்தி 8 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதை முன்னாள் எம்எல்ஏ., மேகநாதன் துவக்கி வைத்தார். குலோபல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பு வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த நடைபயணம், ராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டி வரை 8 கி.மீ., தூரம் சென்று நிறைவடைந்தது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், காந்தி இயக்கம் பிராங்ளின் ஆசாத் காந்தி, வரலாற்று ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் ரவி, இண்டர்நேஷனல் வெல்னஸ் கோச் லதா செல்வம், ஆவண எழுத்தர் பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் உறுப்பினர்கள் சரவணன், சக்தி, கால்பந்து வீரர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது