×

எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு

கரூர், ஜன. 13: கரூரில் நேற்று நடைபெற்ற எஸ்ஐ பதவிக்கான எழுத்துத் தேர்வினை 1416பேர்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 381 பேர் தேர்வுஎழுத வரவில்லை, கரூர் சேலம் பைபாஸ் சாலையோரம் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லு£ரி மற்றும் மேல்நிலைப்பள்ளி அடுத்தடுத்து உள்ளன. இந்த பள்ளி வளாகத்தில் நேற்று எஸ்ஐ பதவிக்கான எழுத்துத் தேர்வு காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெற்றன. இந்த தேர்வினை எழுத, தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பித்திருந்தனர். இதில், நேற்று தேர்வு எழுத 1416பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 381 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இதே தேர்வு மையத்தில், போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு எஸ்ஐ தகுதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதனை 207 பேர் கலந்து கொண்டு எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்