×

விளையாட 24 வீரர்கள் தேர்வு

பெ.நா.பாளையம், ஜன.13:கோவை மாவட்ட வாலிபால் அணியில் விளையாட 24 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருவாரூரில் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி ஜன.17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோவை மாவட்டம் சார்பில் விளையாட உள்ள ஜூனியர் வாலிபால் அணி வீரர்கள் தேர்வு நேரு ஸ்டேடியத்தில் உள்ள வாலிபால் மைதானத்தில்  நடந்தது. தமிழ்நாடு மாநில வாலிபால் கழக மேற்பார்வையாளர்கள் ஜெயக்குமார் மற்றும் தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் மற்றும் வாலிபால் அணிகளை சேர்ந்த ஆண்கள் 60 பேர்,  பெண்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு தலா 12 பேர் என மொத்தம் 24 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான வீரர்களுக்கு இன்று (13ம் தேதி) முதல் 16ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டு கோவை மாவட்ட வாலிபால் அணி சார்பில் திருவாரூரில் நடக்கும் மாநில மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். வீரர்களின் தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மாநில வாலிபால் கழக உதவித் தலைவருமான  நாராயணசாமி  ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்ச்சியில், மாநில வாலிபாபல் கழக நிர்வாகிகள் செல்லமுத்து, சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை