புதுச்சேரி, ஜன. 13: பாகூர் உழவர் உதவியகம், பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பங்கள் பற்றிய பண்ணை பள்ளி குருவி நத்தம் வருவாய் கிராமமான சோரியாங்குப்பத்தில் நடந்தது. பாகூர் வேளாண் அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் விஜயகுமார் நிலக்கடலை தாக்கும் பூச்சி பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் எடுத்துரைத்தார்.