×

ராட்சத அலையில் சிக்கிய சிறுவன் மாயம்

காலாப்பட்டு, ஜன. 13:  புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்தி மகன் வசந்த் (16), ரமேஷ் மகன் சஞ்சய்குமார் (16), ஆறுமுகம் மகன் சஞ்சய்குமார் (16), வாசுதேவன் மகன் சஞ்சய் (17), வேலு மகன் மணிகண்டன் (16). இதில் வசந்த் தவிர மற்றவர்கள் காலாப்பட்டில் உள்ள செவாலிய செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் நண்பர்கள். விடுமுறை தினமாக நேற்று காலாப்பட்டு கடற்கரைக்கு சென்ற 5 பேரும், பின்னர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது, திடீரென எழும்பிய ராட்சத அலையில் வசந்த் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து, கடலில் குளித்த மற்ற 4 பேரும் கரைக்கு ஓடிவந்து வந்து கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று அலையில் இழுத்து செல்லப்பட்ட வசந்த்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வசந்த் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்களும் கடற்கரைக்கு வந்து வசந்த்ைத தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், வசந்த் கிடைக்கவில்லை. இதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் மாயமான வசந்த்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...