நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் பதவியேற்பு

ஏரல், ஜன.13: ஏரல் அருகேயுள்ள நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சுதாகலா தேர்தல் உதவி அலுவலர் முத்துகனி முன்னிலையில் பதவியேற்றார். இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் 1வது வார்டு அன்னகனி, 2வது வார்டு ஜான்சிராணி, 3வது வார்டு சுப்புலட்சுமி, 4வது வார்டு சரோஜா, 5வது வார்டு எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம், 6வது வார்டு எஸ்.பண்டாரம், 7வது வார்டு பால்வெஸ்லி, 8வது வார்டு பிரியா, 9வது வார்டு மணிமந்திரம் ஆகியோரும் பதவியேற்றனர். இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், தொழிலதிபர் பாஸ்கர், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: